ADDED : ஜூலை 05, 2026 11:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால், மனமுடைந்த கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடப்பாக்கம், புதுநகரைச் சேர்ந்தவர் ஜோஷ்வா, 27; எலக்ட்ரீஷியன். குடிப்பழக்கம் உள்ள இவர் குடித்து விட்டு வந்து மனைவி சத்யாவிடம் தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு சத்யா மகளை அழைத்து கொண்டு தாய்வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த ஜோஷ்வா நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
