/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கட்டண நிலுவை தொகை செலுத்த மின்துறை வலியுறுத்தல்
/
மின் கட்டண நிலுவை தொகை செலுத்த மின்துறை வலியுறுத்தல்
மின் கட்டண நிலுவை தொகை செலுத்த மின்துறை வலியுறுத்தல்
மின் கட்டண நிலுவை தொகை செலுத்த மின்துறை வலியுறுத்தல்
ADDED : மார் 04, 2025 09:49 PM
புதுச்சேரி : புதுச்சேரி வடக்கு கோட்ட மின்துறைக்கு உட்பட்ட பகுதிகளில், நுகர்வோர்கள் மின் கட்டணபாக்கியை செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி வடக்கு கோட்ட (கிராமம்) மின்துறை நிர்வாக பொறியாளர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
மின்துறை கிராமம் வடக்கு கோட்டத்திற்கு கீழ் இயங்கும் வில்லியனூர், பூமியான்பேட், லாஸ்பேட்டை, கோரிமேடு, அசோக் நகர், முத்திரையர்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனூர், காட்டேரிக்குப்பம் ஆகிய இயக்குதலும் மற்றும் பராமரித்தலும் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டண பாக்கியை பட்டியலில் உள்ள இறுதி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொாள்ளப்படுகிறது.
மின் இணைப்பு துண்டித்த பிறகு நிலுவைத்தொகை முழுவதையும் செலுத்திய பிறகே மறுமின் இணைப்பு வழங்கப்படும். எனவே மின் நுகர்வோர் அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.