sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு  ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை அவகாசம் நீட்டிப்பு

/

அரசு  ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை அவகாசம் நீட்டிப்பு

அரசு  ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை அவகாசம் நீட்டிப்பு

அரசு  ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை அவகாசம் நீட்டிப்பு


ADDED : செப் 05, 2024 05:13 AM

Google News

ADDED : செப் 05, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) மாணவர் சேர்க்கை கால அவகாசம் செப்., 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு ஆண்கள் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், எலக்ட்ரீஷியன், ஏ.சி., டெக்னீஷியன், மோட்டார் வாகன மெக்கானிக், பிளாஸ்டிக் செயல்முறை இயக்குபவர், ஒயர்மேன், வெல்டர், மின்சார வாகன மெக்கானிக் மற்றும் ட்ரோன் டெக்னீஷியன் போன்ற பயிற்சி பிரிவுகளுக்கான நேடி சேர்க்கை நடந்து வருகிறது.

பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெற தவறியவர்கள், 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் உரிய மதிப்பெண் சான்றிதழ், இறுதியாக கல்வி பயின்ற கல்வி நிலையத்தில் இருந்து பெறப்பட்ட மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேரடியாக அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை சந்தித்து உடனடி சேர்க்கை பெற்றுக்கொள்ளலாம். வம்பாகீரப்பாளையம் அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம், வில்லியனுார், பாகூர், நெட்டப்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கான நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.

பயிற்சியில் சேர விரும்பம் மாணவர்கள் அந்தந்த தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரில் சந்தித்து சேர்க்கை பெறலாம். முதலில் வரும் மாணவர்ளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உடனடி சேர்க்கை இம்மாதம் 30ம் தேதி வரை நடக்கும்.






      Dinamalar
      Follow us