/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு
/
கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு
ADDED : மார் 23, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
மூலக்குளம் ஜே.ஜே., நகரை சேர்ந்தவர் லெவியான். இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் உழவர்கரை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அங்கு நின்ற அதே பகுதியை சேர்ந்த ஒமர், ஜெயராஜ் உட்பட 5 பேர் சேர்ந்து, லெவியானை கேலி செய்தனர். அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு, தாக்கி கொண்டனர்.
இதுகுறித்து, லெவியான் மற்றும் ஒமார் ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரில், லெவியான், ஒமார் உட்பட 8 பேர் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

