ADDED : ஜூன் 01, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: கணவருடன் ஏற்பட்ட தகரறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்கால் நெடுங்காடு மத்தளங்குடி அந்தோனியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சவுரிமுத்து மகன் சதீஷ் .இவரது மனைவி சூர்யா, 32; இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பவுன் தோட்டை காணவில்லை .
இது குறித்து கணவன், மனைவி இடையோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்திரமடைந்த மனைவி சூர்யா வீட்டில் உள்ள எறும்பு மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா நேற்று அதிகாலை இறந்தார்.
புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
