நெட்டப்பாக்கம்: கோர்க்காடு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.
வில்லியனுார் அடுத்த கோர்க்காடு கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை அம்மனுக்கு அபி ேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
கடந்த 19ம் தேதி மாலை 6.00 மணிக்கு அர்ஜூனன்-திரவுபதி திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று மாலை 5.00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. விழாவில் ஏரளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடனை செலுத்தினர்.
விழாவில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர்கள் வெங்கடேசன், ஆறுமுகம், ராஜா, முத்து, ஏகாம்பரம் மற்றும் கோர்க்காடு கிராம மக்கள் செய்துள்ளனர்.

