நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அரியாங்குப்பம் ஆர்.கே., நகர் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரமோற்சவ விழா நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. பக்தர்கள் தீமித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தொடர்ந்து, இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. நிழ்ச்சியில், எம்.எல்.ஏ., பாஸ்கர் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.