/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா
/
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா
ADDED : செப் 01, 2024 04:12 AM

புதுச்சேரி : கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் முதுகலை மாணவர்களின் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது.
விழாவில் கல்லுாரி தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், அறங்காவலர்கள் முகமது இலியாஸ், முனைவர் சிந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்லுாரி முதல்வர் மகேந்திரன் மற்றும் கல்வி புலத் தலைவர் கனிமொழி ஆகியோர், மேலாண்மை ஆய்வுகளின் நோக்கம் மற்றும் அதன் முக்கிய மதிப்புகள் குறித்து விளக்கினார். விழாவில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மின்னியியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் கல்பனா, அறிவியல் மற்றும் மனித நேயத் துறை பேராசிரியர் மார்கண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.