ADDED : மே 25, 2024 03:58 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம், நல்லவாடு ஆகிய பகுதி மீனவர்கள் வலைகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் மீன் பிடி தடை காலம் ஏப்ரல் 15ம் தேதி துவங்கி வரும் 14ம் தேதி வரை தடை காலம் அமலில் உள்ளது. 61 நாட்கள் இருக்கும் தடை காலங்களில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லாமல், படகுகளை, தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த இரண்டு மாதங்களில், படகுகளை சீரமைத்து பெயிண்ட் அடிக்கும் பணி, வலை பின்னுதல் போன்ற வேலைகளை மீனவர்கள் செய்து வருகின்றனர்.
