sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் காங்., மாடல் ஆட்சி அமைக்க வேண்டும் மாஜி முதல்வர்   நாராயணசாமி நம்பிக்கை

/

புதுச்சேரியில் காங்., மாடல் ஆட்சி அமைக்க வேண்டும் மாஜி முதல்வர்   நாராயணசாமி நம்பிக்கை

புதுச்சேரியில் காங்., மாடல் ஆட்சி அமைக்க வேண்டும் மாஜி முதல்வர்   நாராயணசாமி நம்பிக்கை

புதுச்சேரியில் காங்., மாடல் ஆட்சி அமைக்க வேண்டும் மாஜி முதல்வர்   நாராயணசாமி நம்பிக்கை


ADDED : ஆக 28, 2024 04:03 AM

Google News

ADDED : ஆக 28, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : புதுச்சேரியில் காங்., தலைமையில், காங்., மாடல் ஆட்சியை நாம் அனைவரும் இணைந்து அமைக்க வேண்டும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார்.

புதுச்சேரி சுதேசி மில் அருகில், காங்., சார்பில், ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

பா.ஜ., கூட்டணியில் உள்ள கட்சிகளே, ஜாதி வாரி கணக்கெடுப்பிற்கு ஆதரவு தருகின்றன. இதனால் பிரதமர் மோடி நெருக்கடியில் இருக்கிறார். முதல்வர் ரங்கசாமி, இண்டியா கூட்டணி எம்.பி.,க்களிடம் பேசி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்குவோம் என்கிறார். அப்படி எனில், அவருக்கு பா.ஜ.,கூட்டணியில் நம்பிக்கை இல்லை. இது அவர் எந்தளவிற்கு பலவீனமாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது.

பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி, இதுவரை ஒரு தேர்தல் வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. லோக்பசா தேர்தலில் அந்த கூட்டணி தோல்வி அடைந்ததற்கு அது தான் முக்கிய காரணம். இந்த ஆட்சியில் முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவரே, இந்த ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை அடுக்குகிறார். ஒரு அமைச்சர், பினாமி பெயரில், 5 வீடுகளை வாங்கி இருக்கிறார். இதை எல்லாம் களைய, நாம் அனைவரும் இணைந்து, புதுச்சேரியில் காங்., மாடல் ஆட்சி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us