ADDED : நவ 05, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சூரமங்கலம் அரசு துவக்கப் பள்ளியில் இலவச புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஜெகத்தி பவுண்டேசஷன் புதுச்சேரி மாநில கிளை சார்பில், சூரமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை மற்றும் கணினி கற்பித்தலுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஜெகத்தி பவுண்டேஷன் துணைத் தலைவர் அபு புக்கர் , புதுச்சேரி கிளை பொறுப்பாளர் சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புத்தகபை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

