ADDED : ஜூலை 15, 2024 11:35 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டின் சுதந்திர தின விழா, புதுச்சேரி பிரான்ஸ் தூதரகத்தில் நேற்று மாலை நடந்தது.
விழாவில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கலந்து கொண்டு புதுச்சேரி பிெரஞ்சு துணை தூதர் லிசே டல்போட் பரே வுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அமைச்சர் பேசுகையில் பிரான்ஸ் நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் நல்ல நட்பு உறவு உள்ளது.
இது வலுவாக தொடரும் எனவும் ஒலிம்பிக் போட்டியை நடத்த உள்ள பிரான்ஸ் நாட்டுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார்.
விழாவில் சபாநாயகர் செல்வம், தலைமை செயலர் ஷரத் சவுகான், டி.ஜி.பி., சீனிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
