/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குப்பை குவிந்து சுகாதார சீர்கேடு
/
குப்பை குவிந்து சுகாதார சீர்கேடு
ADDED : ஆக 15, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பா.ம.க., மாநில அமைப்பாளர்கள் கணபதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை;
புதுச்சேரியில், உள்ளாட்சி துறை மூலம் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப காலமாக குப்பைகள் முழுமையாக சேகரிக்கப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. அதனால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொரு மாதம் பணி செய்ததற்கான பில் கடந்த 4 மாதங்களாக நிதி வழங்காமல் இருக்கிறது.
துாய்மை பணி செய்யும் தொழிலாளர்களுக்கு மாதம் சம்பளம் வழங்க இயலாத நிலையில், பணியாளர்கள் வேலைக்கு வருவதில்லை. இப்பிரச்னையை முதல்வர் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.