/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து மனுதாக்கல் செய்த அமைச்சர்
/
நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து மனுதாக்கல் செய்த அமைச்சர்
நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து மனுதாக்கல் செய்த அமைச்சர்
நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து மனுதாக்கல் செய்த அமைச்சர்
ADDED : மார் 26, 2024 04:47 AM
புதுச்சேரி: லோக்சபா தேர்தலில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணியில், பா.ஜ., வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் களம் இறங்கி உள்ளார்.
வேட்பு மனு செய்வதிற்கு முன்னதாக நேற்று காலை கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவில், திலாஸ்பேட்டை அப்பா பைத்தியம் சுவாமி கோவிலிலும், கதிர்காமம் முருகன் கோவிலில் முதல்வர் ரங்கசாமியுடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்பு காலை 11:55 மணிக்கு கதிர்காமம் கோவிலில் இருந்து முதல்வர் ரங்கசாமியின் காரில் அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., பொறுப்பாளர் சுரானா ஆகியோர் புறப்பட்டனர். வழுதாவூர் சாலை முழுதும் தொண்டர்கள் சூழ்ந்து இருந்ததால், ஹாரன் அடித்தபடி முதல்வரின் கார் அதிவேகமாக சென்றது.
முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு செய்வதற்கு கடிதம் அளித்து டோக்கன் வாங்கப்பட்டு இருந்தது. இதனால் சரியாக 12:05 மணிக்கு மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்குள் சென்ற முதல்வர் ரங்கசாமி, வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பகல் 12:11 மணிக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சரியான நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதிற்காக முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் பதற்றத்துடன் இருந்தனர்.

