ADDED : மே 15, 2024 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
மாணவி வைஷ்ணவி 456, மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி ஜனனி 440, மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி சரண்யா 419 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
அவர்களை பள்ளி துணை முதல்வர் சித்ரா சால்வை அணிவித்து பாராட்டினார்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

