/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொடுக்கூரில் 27ம் தேதி மயான கொள்ளை உற்சவம்
/
கொடுக்கூரில் 27ம் தேதி மயான கொள்ளை உற்சவம்
ADDED : பிப் 24, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : திருக்கனுார் அருகே தமிழக பகுதியான கொடுக்கூர் கிராம அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை உற்சவம் இன்று (24ம் தேதி) மாலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
நாளை (25ம் தேதி) காலை 10:00 மணிக்கு பால்குடம் ஊர்வலம், அபிஷேக ஆராதனை நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு அக்னி கரகத்துடன் சுவாமி வீதியுலா நடக்கிறது.
வரும் 26ம் தேதி காலை 8:00 மணிக்கு, கொரைக்கூடை வீதியுலா, இரவு 9:00 மணிக்கு குறத்தி வேடத்தில் அம்மன் ஊர்வலம், வல்லாளக்கண்டன் கோட்டையை அழித்தல், ரணகளிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக, வரும் 27ம் தேதி மதியம் 12:00 மணிக்கு, மயான கொள்ளை உற்சவம் நடக்கிறது.

