நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: புதுச்சேரி மதகடிப்பட்டு கடை வீதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்குள்ள கடைகளில் சோதனை செய்தனர்.
அப்பாஸ் 55; என்பவரின் பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த பான்பராக், விமல் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கடை உரிமைாளர் அப்பாசை கைது செய்தனர்.