நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஒதியன்சாலை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட சோனாம்பாளையம் சந்திப்பு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது துப்புராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அந்தோணி, 76, என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.