/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு புகுந்து 4.5 சவரன் திருட்டு போலீசார் விசாரணை
/
வீடு புகுந்து 4.5 சவரன் திருட்டு போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 25, 2024 05:26 AM
புதுச்சேரி: வினோபா நகரில் வீடு புகுந்து 4.5 சவரன் நகை திருடியது தொடர்பாக புகார் கொடுத்தவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, வினோபா நகரைச் சேர்ந்தவர் ஜெனிவியா ஜேவாஸ், 56. இவரது சகோதரி வெளிநாட்டில் வசிக்கிறார். சகோதரியின் வீட்டை ஜெனிவியா ஜேவாஸ் பராமரித்து வருகிறார். கடந்த 22ம் தேதி இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த 3 மர்ம நபர்கள், பீரோவை உடைத்து, அதில் இருந்த 4.5 சவரன் நகை, 2 வாட்ச், வெள்ளி பொருட்களை திருடிச் சென்றதாகவும், தடுக்க வந்த தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்றதாகவும் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். திருட்டு நடந்த வீட்டிற்குள் மர்ம நபர்கள் வந்து சென்றதற்கான அடையாளம் கிடைக்கவில்லை. புகார் தெரிவித்த ஜெனிவியா ஜேவாஸ் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறி வந்ததால், அவரிடமே போலீசார் விசாரித்து வருகின்றனர்.