ADDED : ஆக 23, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப், 32. இவரது மனைவி அபூர்வாவுடன், சுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 18ம் தேதி தங்கி இருந்தார்.
இந்நிலையில், அவரது மனைவி காயத்துடன், மயங்கிய நிலையில் அறையை விட்டு வந்தார். விடுதி ஊழியர் என்ன நடந்தது என அவரது கணவரிடம் கேட்ட போது, மருத்துவமனையில், சேர்க்க வேண்டும் என கூறினார்.
இதுகுறித்து, விடுதி மேலாளர் பெரியக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், அரசு மருத்துவமனையில் காயத்துடன் சிகிச்சை பெற்ற அபூர்வாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், கணவர் சந்தேகப்பட்டு, தன்னை தாக்கியதாக தெரிவித்தார். அதன்பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, பிரதீப்பை கைது செய்தனர்.

