ADDED : ஜூலை 15, 2026 10:53 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மனைவியிடம் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன், 30; கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனால் பிரபாகரன் மது குடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரவு மனைவியின் நைலான் டாப்பில் வீட்டு மின்விசிறியில் துாக்கு போட்டு கொண்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கி சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.
புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
