ADDED : ஆக 04, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருவடிக்குப்பம், எடையன்சாவடி ரோட்டை சேர்ந்தவர் அருண்குமார், 27; திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். அவரது மனைவி வேறு திருமணம் செய்து கொண்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகிய அருண்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அருண்குமார் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
