ADDED : செப் 09, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி, 37; டிரைவர்இவரது மனைவி சத்யா, 34. மூன்று மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை சத்யா மங்கலம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அங்கு செல்லவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.