ADDED : ஜூன் 07, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கணவர் மாயமானது குறித்து மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
மூலக்குளம், ஜெ.ஜெ., நகரை சேர்ந்தவர் இளங்கோ மகன் சந்திரன், 30. இவர், கடந்த 31ம் தேதி வீட்டில் இருந்து, வெளியே சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி தேவலட்சுமி அளித்த புகாரின் பேரில், ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.
