sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'கேள்வி கேட்டதால் சட்டசபையில் உள்ளேன் கேள்வி கேட்காதவர்கள் வெளியே உள்ளனர்'  கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பதிலடி

/

'கேள்வி கேட்டதால் சட்டசபையில் உள்ளேன் கேள்வி கேட்காதவர்கள் வெளியே உள்ளனர்'  கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பதிலடி

'கேள்வி கேட்டதால் சட்டசபையில் உள்ளேன் கேள்வி கேட்காதவர்கள் வெளியே உள்ளனர்'  கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பதிலடி

'கேள்வி கேட்டதால் சட்டசபையில் உள்ளேன் கேள்வி கேட்காதவர்கள் வெளியே உள்ளனர்'  கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பதிலடி


ADDED : ஆக 07, 2024 05:30 AM

Google News

ADDED : ஆக 07, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கேள்வி எழுப்பியதால் சட்டசபையில் உள்ளேன். கேள்வி கேட்காதவர்கள் சபைக்கு வெளியே உள்ளனர் என, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசினார்.

புதுச்சேரி பட்ஜெட் மீதான விவாதம் வருமாறு;

கல்யாணசுந்தரம்: கருவடிக்குப்பம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், ஏ.பி.சி., கேபிள் அமைக்க வேண்டும்.

நேரு: என் தொகுதியில் ஏ.பி.சி. கேபிள் அமைக்க டெண்டர் எடுத்த நபரை 6 மாதமாக காணவில்லை.

கல்யாணசுந்தரம்: மின்துறையில் ஆட்கள் இருந்தாலும், வேலை செய்வதில் சுணக்கம் காட்டுகின்றனர்.

நேரு: அனைத்து தொகுதிக்கும் லேடர் ஒன்று வாங்கி கொடுங்கள். லேடர் இல்லை என, மின் கம்பத்தில் ஏற மறுக்கின்றனர்.

நமச்சிவாயம்: உறுப்பினர் கூறும் குறைகள் உடனடியாக சரிசெய்ய ஆவணம் செய்யப்படும்.

கல்யாணசுந்தரம்: கடந்த காங்., ஆட்சியில் தலைமை செயலகம் எதிரில் கருங்கல் கொட்டி கடற்கரையை உருவாக்கியதால், பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு திட்டம் கொண்டு வரும்போது பக்கவிளைவுகளை பற்றி சிந்திக்க வேண்டும். கடந்தமுறை நால்வர் அணியாக இருந்தவர், தற்போது 6 பேர் அணியாக உள்ளார் என என்னை கூறினர். கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியில் கேள்வி எழுப்பியதால் இந்த சபையில் உள்ளேன். கேள்வி கேட்காதவர்கள் சட்டசபைக்கு வெளியே உள்ளனர்.

பி.ஆர்.சிவா: கேள்வி கேட்பது வேறு, பதவி கேட்பது வேறு.

சபாநாயகர் செல்வம்: தனி நபர் விமர்சனம் வேண்டாம் என தெரிவித்ததைத் தொடர்ந்து சபை அமைதியானது.






      Dinamalar
      Follow us