ADDED : ஜூன் 07, 2024 06:49 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : போலீஸ் ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.புதுச்சேரியில் உள்ள கோவில்களில், நேற்று வைகாசி அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தன.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, தனது குடும்பத்தினருடன் நேற்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, அவர் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அவருக்கு கோவில்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
