ADDED : ஆக 02, 2024 11:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : புதுச்சேரி, சஞ்சய் காந்தி நகர், சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள, மகா மாரியம்மனுக்கு ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி, சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதையொட்டி, காலையில் மகா மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை, சாகை வார்த்தல் நடந்தது.
நிகழ்ச்சியை கோவில் தனி அலுவலர் சீனு மோகன்தாசு தொடங்கி வைத்தார். ஆலய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
