/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்திய விவகாரம்: கல்வித் துறை,பல்கலைக் கழகம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
/
புதுச்சேரியில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்திய விவகாரம்: கல்வித் துறை,பல்கலைக் கழகம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
புதுச்சேரியில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்திய விவகாரம்: கல்வித் துறை,பல்கலைக் கழகம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
புதுச்சேரியில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்திய விவகாரம்: கல்வித் துறை,பல்கலைக் கழகம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : மே 09, 2024 04:29 AM
புதுச்சேரி : தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் புதுச்சேரி கல்வித் துறை இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கையை அவசரகதியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் சுவாமிநாதன் ஐகோர்ட்டில் தடையானை கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், புதுச்சேரி பல்கலைக்கழகம்,பள்ளி கல்வித் துறை, புதுச்சேரியில் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தேசிய கல்விக் கொள்கையை மாணவர்கள் மத்தியில் திணிக்கும் முயற்சி நடந்தது.
இதற்கு எதிராக புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியது. இவ்விவகாரம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால், புதுச்சேரி பல்கலைக்கழகமும்,பு துச்சேரி அரசும் மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக அவசர கதியில் திணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுச்சேரி மாணவர்களை பற்றி சிறிதும் சிந்திக்காமல் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தடை பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இம்மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ்சந்திரா,கலைமதி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை நடத்திய நீதிபதிகள்,புதுச்சேரி பல்கலைக்கழகம்,புதுச்சேரி அரசும், இரண்டு வாரங்களுக்குள் உரிய பதிலை அளிக்க உத்தரவிட்டனர்.
இரண்டு வாரங்களுக்கு பிறகு இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் ஐகோர்ட் வழக்கறிஞர் ஞானசேகரன் ஆஜரானார்.