ADDED : ஜூலை 13, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மணவெளி அரசு தொடக்கப் பள்ளியில் முன்மழலையர் வகுப்புக்கான 'கற்றல் வள மையம்' திறப்பு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். ராணி மேரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பள்ளி வட்டம் 3 துணை ஆய்வாளர் லிங்குசாமி, கற்றல் வள மையத்தை திறந்து வைத்தார். சமக்ர சிக் ஷா ஒருங்கிணைப்பாளர் ஹெலன் ராணி வாழ்த்துரை வழங்கினார். மையத்தில் இருந்த கற்றல் உபகரணங்களை குழந்தைகள் பயன்படுத்தியதை பெற்றோர்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர்.
மோகன்ராஜ் நன்றி கூறினார்.