sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் சிறப்பு துப்புரவு முகாம் துவக்கம்

/

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் சிறப்பு துப்புரவு முகாம் துவக்கம்

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் சிறப்பு துப்புரவு முகாம் துவக்கம்

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் சிறப்பு துப்புரவு முகாம் துவக்கம்


ADDED : மே 21, 2024 05:03 AM

Google News

ADDED : மே 21, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சிறப்பு துப்புரவு முகாமை ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்தார்.

புதுச்சேரி மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் குப்பைகள் அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், குப்பைகள் அகற்றும் பணியினை தீவிர படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் பார்வையிட்டு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

சிறப்பு துப்புரவு முகாம் மற்றும் ஹெச்.ஆர். ஸ்கொயர் தனியார் நிறுவனம் மூலம் குப்பை அகற்றும் பணியினை தீவிர படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையடுத்து, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் 15 நாட்கள் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பு துப்புரவு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருக்கனுார் பஜார் வீதியில் சிறப்பு துப்புரவு முகாமை ஆணையர் எழில்ராஜன் நேற்று துவக்கி வைத்தார்.

பின்னர், தினமும் கிராமத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சரியான முறையில் குப்பைகளை அகற்ற வேண்டும் என தனியார் நிறுவன ஊழியர்கள், சூப்பர்வைசர்கள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

தொடர்ந்து, திருக்கனுார் பஜார் வீதியில் இருந்த குப்பைகள் மற்றும் சாலை நடுவே தடுப்பு கட்டையில் ஒட்டப்பட்டிருந்த விளம்பர போஸ்டர்களை ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், திருக்கனுார் மற்றும் கே.ஆர்.பாளையம் கிராம தெருக்களில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us