ADDED : ஜூலை 19, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கோரிக்கைகளை முன் வைத்து, கையெழுத்து இயக்கம் நடத்த இந்திய கம்யூ., கிளை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்திய கம்யூ., காமராஜர் நகர் தொகுதி வாஞ்சிநாதன் நகர் கிளை கூட்டம், நேற்று நடந்தது. கிளை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார், தொகுதி செயலாளர் செல்வம் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பாதாள சாக்கடை இணைப்பு, சுத்தமான குடிநீர், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து, மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது. புதுச்சேரி மற்றும் டில்லியில் நடக்கும் பாதயாத்திரை மற்றும் பேரணியில் பங்கேற்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
