sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சர்வதேச தரத்தில் நீச்சல் பயிற்சி குளம்

/

சர்வதேச தரத்தில் நீச்சல் பயிற்சி குளம்

சர்வதேச தரத்தில் நீச்சல் பயிற்சி குளம்

சர்வதேச தரத்தில் நீச்சல் பயிற்சி குளம்


ADDED : ஜூலை 25, 2024 05:36 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சாரதாம்பாள் நகரில் நீச்சல் விளையாட்டு பயிற்சிக்கு ரூ. 5.5 கோடி மதிப்பில் நீச்சல் குளம்தயாராகி வருகிறது.

தமிழத்தில் மாவட்டம்தோறும் அரசு சார்பில் நீச்சல் குளம் அமைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. புதுச்சேரியில் அரசு சார்பில் ஒரு நீச்சல் பயிற்சி குளம் கூட கிடையாது. தனியார் நீச்சல் குளங்களில் தான் நீச்சல் பயிற்சி பெறும் நிலை உள்ளது. இதனால் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், புதிதாக நீச்சல் குளம் அமைக்க திட்டமிடப்பட்டது.

நகர பகுதியில் அதற்கான போதிய நிலம் இல்லாததால், அரசுக்கு சொந்தமான கடற்கரை ஜப்பான் பூங்கா ஓரம் இருந்த நிலத்தை தனியாருக்கு கொடுத்து விட்டு, அதற்கு பதிலாக சாராதாம்பாள் நகரில் உள்ள தனியார் நிலத்தை அரசு பெற்று கொண்டது.

அந்த இடத்தில், ரூ. 5.5 கோடி மதிப்பில், நீச்சல் குளம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது. ஒலிம்பிக் போட்டி நடத்தும் தரத்தில் 50 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலம், 1.75 மீட்டர் ஆழத்துடன் நீச்சல் குளம் கட்டும் பணி நடந்து வருகிறது.

ஆண்கள், பெண்கள் என, 16 பேர் உடை மாற்றும் அறைகள், பொருள் பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டு வருகிறது. தற்போது கட்டுமான பணிக்கான தொகையை அரசு விடுவித்ததால், பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பணிகள் முடிந்து அக்டோபர் மாதம் திறப்பு விழா நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us