ADDED : ஆக 29, 2024 07:17 AM

அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: மாநில அளவில் நடந்த சிலம்பாட்டம் போட்டியில் சூரமங்கலம் ஜெயதுர்கா பள்ளி மாணவர் முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு வீர தமிழர் தற்காப்பு சிலம்பம் விளையாட்டு கலைக்கூட பேரவை சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவில் சிலம்பாட்டம் போட்டி பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 10 பள்ளிகள் பங்கேற்றனர்.
இதில் சூரமங்கலம் ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் வேல் முதல் பரிசு மற்றும் கோப்பை பெற்று சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவருக்கு நிர்வாகி விஜயா சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
