/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீராம்பட்டினம் தேரோட்டத்தில் 2 பெண்களிடம் நகை பறிப்பு
/
வீராம்பட்டினம் தேரோட்டத்தில் 2 பெண்களிடம் நகை பறிப்பு
வீராம்பட்டினம் தேரோட்டத்தில் 2 பெண்களிடம் நகை பறிப்பு
வீராம்பட்டினம் தேரோட்டத்தில் 2 பெண்களிடம் நகை பறிப்பு
ADDED : ஆக 16, 2024 11:00 PM
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் தேர் திருவிழாவிற்கு வந்த இரண்டு பெண்களிடம் தாலி செயினை பறித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீராம்பட்டினம், செங்கழுநீர் அம்மன் கோவில் தேர்திருவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். தேரோட்டத்தின் போது, அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில், பொதுமக்கள் கூட்டம் அதிமாக காணப்பட்டது.
விழாவிற்கு வந்த ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்துறை ஊழியரின் மனைவி ராஜேஸ்வரி அணிந்திருந்த 10 சவரன் தாலி செயின் , தேங்காய்த்திட்டு வசந்த நகர் ராணி அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இருவரும் அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

