/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் வெளி நோயாளி பிரிவு 19ம் தேதி இயங்காது
/
ஜிப்மர் வெளி நோயாளி பிரிவு 19ம் தேதி இயங்காது
ADDED : ஏப் 14, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர் தலை முன்னிட்டு வரும், 19ம் தேதி வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என, ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது குறித்து மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவை முன்னிட்டு வரும், 19ம் தேதி அரசு விடுமுறை தினமான அன்று, ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. அதனால், அன்றைய தினம் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
எனினும் அவரச பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

