ADDED : மார் 26, 2024 04:57 AM

புதுச்சேரி; காங்.,வேட்பாளர் வைத்திலிங்கத்தை மக்கள் நீதி மைய நிர்வாகிகள் சந்தித்து தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இண்டியா கூட்டணியின் புதுச்சேரி லோக்சபா வேட்பாளர் வைத்திலிங்கம் கூட்டணி கட்சி தலைவர்,நிர்வாகிகளை சந்தித்து தொடர்ந்து ஆதரவு திரட்டி வருகின்றார்.
இந்நிலையில் மக்கள் நீதி மைய மாநில பொதுசெயலாளர் சந்திரமோகன் தலைமையில் காங்.,வேட்பாளர் வைத்திலிங்கத்தை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து இந்தியா கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
மேலும்,தேர்தல் பணிக்குழு அமைப்பது,தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனை பிரசாரத்திற்கு அழைப்பது குறித்தும் ஆலோசனை செய்யப் பட்டது.
மாநில நிர்வாகிகள் முருகேசன், சக்திவேல், ரூபன்தாஸ், சக்திவேல் பட்டுரோஸ், இன்னாசிராக், செல்வி உள்பட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

