sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் கம்பன் விழா வரும் 10ம் தேதி துவங்குகிறது

/

புதுச்சேரியில் கம்பன் விழா வரும் 10ம் தேதி துவங்குகிறது

புதுச்சேரியில் கம்பன் விழா வரும் 10ம் தேதி துவங்குகிறது

புதுச்சேரியில் கம்பன் விழா வரும் 10ம் தேதி துவங்குகிறது


ADDED : மே 03, 2024 06:28 AM

Google News

ADDED : மே 03, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில், வரும் 10ம் தேதி, 57வது கம்பன் விழா துவங்குகிறது.

புதுச்சேரி கம்பன் கழக தலைவர் செல்வகணபதி எம்.பி., நேற்று அளித்த பேட்டி:

கம்பன் கழகம், புதுச்சேரிக்கு ஓர் அடையாளமாக விளங்குகிறது. கம்பனின் இலக்கியத்தை வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்லும் வகையில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கம்பன் கலையரங்கில், வரும் 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை, 57வது கம்பன் விழா நடக்க உள்ளது.

முதல் நாள் துவக்க விழாவில் திருநாள் மங்கல நிகழ்ச்சியில், கவர்னர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அன்றைய தினம் பல்வேறு நுால்கள் வெளியிடப்பட உள்ளன. மேலும், புதுச்சேரி மாநில சிறந்த தமிழ்ப்புலவர்களுக்கான பரிசுகளும், கம்பன் கழக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. மேலும் எழிலுரை, தனியுரை, கருத்தரங்கம், உள்ளிட்ட பல்சுவை இலக்கிய நிகழ்வுகள் அரங்கேற உள்ளன.

அடுத்த நாள், இளையோர் அரங்கம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசு, வழக்காடுமன்றம், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

விழா இறுதி நாளில், சிந்தனை அரங்கம் உள்ளிட்ட ஏராளமான இலக்கிய நிகழ்ச்சிகள் தொடந்து நடக்க உள்ளன.

இந்த விழாவில், தமிழ் சான்றோர்கள், பல்துறை அறிஞர்கள் சிறப்பிக்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். செயலாளர் சிவக்கொழுந்து உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us