
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு பகவான் ராமகிருஷ்ணா பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
வடமங்கலம் பகவான் ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் மாணவி ஷாலினிதேவி, எல்.கே.ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தார். தொடர்ந்து மேல்நிலைப் படிப்பை புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார்.
இவர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600க்கு 593 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு வடமங்கலம் பகவான் ராமகிருஷ்ணா பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவசுப்ரமணி, மாணவி ஷாலினிதேவிக்கு ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாணவியின் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.