நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஏம்பலம் அடுத்த ஆலமரத்துக்குப்பம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன், பரிமளரங்கநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது.
இதையொட்டி கடந்த 10ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜை, கோ பூஜை, முதல் காலயாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் 8:30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, விமான கலசம் படிய வைத்தல், மாலை 5:00 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல், மூன்றாம் காலயாக பூஜை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 9:30 மணிக்கு கடம் புறப்பாடு, 10:00 மணிக்கு விமான கும்பாபிேஷகம், 10:15 மணிக்கு மூலவர் கும்பாபிேஷகம் நடந்தது. 11:00 மணிக்கு மகா தீபராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.