/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் மாகியில் கூலி தொழிலாளி கைது
/
மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் மாகியில் கூலி தொழிலாளி கைது
மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் மாகியில் கூலி தொழிலாளி கைது
மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் மாகியில் கூலி தொழிலாளி கைது
ADDED : ஜூலை 20, 2024 04:37 AM
புதுச்சேரி: மாகியில் பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கேரளா கோழிக்கோடு அருகே அமைந்துள்ளது புதுச்சேரி பிரதேசமான மாகி பிராந்தியம். இங்குள்ள அரசு பல் மருத்துவ கல்லுாரி அருகில் வசிப்பவர் ராஜேந்திரன், 57; விவசாய கூலித்தொழிலாளி.
இவர் தனது வீட்டின் வழியாக செல்லும் பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுப்படுவதாக புகார் எழுந்தது.
குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் விசாரணையில், ராஜேந்திரன் அவரது வீட்டின் வழியாக சென்ற 8 ம் வகுப்பு மாணவர்களை ஆபாசமாக தொட்டு பாலியல் சீண்டல்களில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
புகாரின் பேரில் பள்ளூர் போலீசார் போக்சோ சட்டம் பிரிவு 8ன் கீழ் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனர்.