sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சலவை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

/

சலவை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

சலவை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

சலவை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்


ADDED : மார் 11, 2025 06:11 AM

Google News

ADDED : மார் 11, 2025 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி சலவை தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி ஜென்மராக்கினி மாதா கோவில் அருகே நேற்று காலை 10:00 மணியவில் நடந்த போராட்டத்தில், சங்க மாநில தலைவர் ஆறுமுகம், கவுரவ தலைவர் முத்து ஆகியோர் தலைமை தாங்கினர். துணை தலைவர் முருகன் வரவேற்றார். துணை தலைவர் முனுசாமி, சுப்பிரமணி, கலியமூர்த்தி, நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொருளாளர் பார்த்தசாரதி, துணை தலைவர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

எம்.பி.சி., பிரிவுக்கு 5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கிட சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வில்லியனுார் மணவெளி மற்றும் ஏம்பலம் தொகுதியில் புதிய சலவைத் துறைகள் கட்டி தரவேண்டும். மாநிலத்தில் உள்ள சலவை துறைகளை புனரமைப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஜென்மராக்கினி மாதா கோவிலில் இருந்து சட்டசபை நோக்கி முற்றுகையிட சென்றனர். பெரியக்கடை போலீசார் தடுத்து நிறுத்தி, அவர்களை கைது செய்தனர்.

சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில், முற்றுகை போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us