/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக பகுதிக்கு கடத்திய மது பாட்டில்கள் பறிமுதல்
/
தமிழக பகுதிக்கு கடத்திய மது பாட்டில்கள் பறிமுதல்
ADDED : மார் 23, 2024 11:31 PM

பாகூர்: தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற மதுபாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்து கலால் துறையில் ஒப்படைத்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில்,வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மது பாட்டில்களை வழங்குவதை தடுக்கும் வகையில், போலீசார் மற்றும் தேர்தல் துறையினர் பறக்கும் படைகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில், உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு உச்சிமேடு சாலை கேசவன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும்,அவர் வைத்திருந்த சாக்கு பையை கீழே போட்டு விட்டு தப்பி சென்றார்.போலீசார் அந்தப் பையை சோதனை செய்த போது அதில், 9 மது பாட்டில் இருந்தது தெரியவந்தது.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, கலால் துறையிடம் ஒப்படைத்து, மதுகடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

