/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மிலாது நபியை முன்னிட்டு நாளை மதுகடைகள் மூடல்
/
மிலாது நபியை முன்னிட்டு நாளை மதுகடைகள் மூடல்
ADDED : செப் 16, 2024 05:35 AM
புதுச்சேரி: மிலாது நபி தினத்தை முன்னிட்டு நாளை 17ம் தேதி மதுகடைகள் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நாளை 17ம் தேதி மிலாது நபி தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி அரசு கலால் துறை ஆணையர் ஆணையப்படி, புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம், பார் உட்பட அனைத்து வகை மதுபான கடைகளுக்கும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.
மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.