sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் 'லோக் அதாலத்': 7 வழக்குகளுக்கு ரூ.12.82 லட்சம் தீர்வு

/

புதுச்சேரியில் 'லோக் அதாலத்': 7 வழக்குகளுக்கு ரூ.12.82 லட்சம் தீர்வு

புதுச்சேரியில் 'லோக் அதாலத்': 7 வழக்குகளுக்கு ரூ.12.82 லட்சம் தீர்வு

புதுச்சேரியில் 'லோக் அதாலத்': 7 வழக்குகளுக்கு ரூ.12.82 லட்சம் தீர்வு


ADDED : ஜூலை 28, 2024 06:05 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி மக்கள் நீதிமன்றத்தில், 7 வழக்குகளில் 12. 82 லட்சம் ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில், தேங்கும் புகார்களுக்கு குறிப்பிட்ட காலகட்டத்தில் தீர்வு காண வேண்டும் எனும் நோக்கில்,புதுச்சேரி மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில், 'கிரகக் மத்யஸ்தா சமாதான்' எனும் மக்கள் நீதிமன்றம், மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமையில், உறுப்பினர்கள் சுவிதா மற்றும் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில், மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் இருந்து, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் சமாதானத்திற்கானவை என கண்டறியப்பட்டன.

அந்த வழக்குகள், பேச்சு வார்த்தைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில்,7 வழக்குகளில் உடன் படிக்கை ஏற்பட்டு, தீர்வு காணப்பட்டது. இதில், பயனாளிகளுக்கு காசோலைகள் மற்றும் உத்தரவு நகல்களை மாவட்ட ஆணையத்தின் தலைவர் முத்துவேல் வழங்கினார்.

மேலும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரமேஷ் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் இந்துமதி புவனேஸ்வரி, வழக்கறிஞர்கள் பழனியப்பன், பாலசுந்தரம், திருமாவளவன், தயாவதி, விமல், லட்சுமணன், தேவேந்திரன், தமிழரசன், செல்வக்குமார், புதுச்சேரி சட்டக்கல்லுாரி மாணவர்கள் மற்றும், 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

காப்பீட்டு நிறுவன தொழிலாளர் வைப்பீட்டு நிதி அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் மூலம் முறையீட்டாளர்களுக்கு, 12 லட்சத்து, 82 ஆயிரத்து 673 ரூபாய் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நுகர்வோர் குறை தீர்வு ஆணைய பதிவாளர் விஜயா மற்றும் ஊழியர்கள் ஏற்பாடு செய்தனர்.






      Dinamalar
      Follow us