/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகா பெரியவர் ஜெயந்தி விழா இன்று நடக்கிறது
/
மகா பெரியவர் ஜெயந்தி விழா இன்று நடக்கிறது
ADDED : மே 24, 2024 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் மகா பெரியவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள காமகோடி பீடத்தின் 68ம் பீடாதிபதியாக விளங்கியவர் மகான் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர் அனைவராலும் 'மகா பெரியவர்' என்று போற்றி வணங்கப் பெற்றார்.
இவரது, 131வது ஜெயந்தி விழா இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், இன்று காலை, தர்ம சம்ரக்ஷன சமிதி சார்பாக, கொண்டாடப்பட உள்ளது.
இந்த பஜனை நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு மகா பெரியவா சுவாமிகளின் பாடல்களை பாடி குரு அருளை பெறலாம்.