sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாட்டை ஈட்டியால் குத்திய நபர் கைது

மாட்டை ஈட்டியால் குத்திய நபர் கைது

மாட்டை ஈட்டியால் குத்திய நபர் கைது


ADDED : ஜூன் 15, 2024 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2024 05:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மாட்டை ஈட்டியால் குத்தியவரை மிருகவதை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம், பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். அப்பகுதியில் அவர் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். மாடுகள், வயல்கள் வழியாக, அருகில் உள்ள வாய்க்காலில் இறங்கி சென்றது.

அதை பார்த்த, வயல்களை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வரும் அதே பகுதியை சேர்ந்த ஜெயராஜவேலு, கூர்மையான ஈட்டியால் பசு மாட்டின் உடலில் குத்தினார். பசு மாட்டின் உடலில் பலத்தம் காயம் ஏற்பட்டது. ஏன் மாட்டை ஈட்டியால் குத்தினாய் என, சுப்ரமணி கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து, சுப்பிரமணி, புதுச்சேரி விலங்கு நல வாரியம் மற்றும் வில்லியனுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, மிருகவதை சட்டத்தின் கீழ், ஜெயராஜவேலுவை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us