sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரான்ஸ் குடியுரிமை பெற்றுத்தருவதாக ரூ.1.22 லட்சம் மோடி போலி சான்றிதழ் கொடுத்தவர் கைது

/

பிரான்ஸ் குடியுரிமை பெற்றுத்தருவதாக ரூ.1.22 லட்சம் மோடி போலி சான்றிதழ் கொடுத்தவர் கைது

பிரான்ஸ் குடியுரிமை பெற்றுத்தருவதாக ரூ.1.22 லட்சம் மோடி போலி சான்றிதழ் கொடுத்தவர் கைது

பிரான்ஸ் குடியுரிமை பெற்றுத்தருவதாக ரூ.1.22 லட்சம் மோடி போலி சான்றிதழ் கொடுத்தவர் கைது


ADDED : ஜூலை 27, 2024 01:54 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: பிரான்ஸ் நாட்டு குடியுரிமை வாங்கி தருவதாக ஓட்டல் ஊழியரிடம் 1.22 லட்சம் ரூபாய் பணம் வாங்கி போலி சான்றிதழ் வழங்கியவரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம், டோல்கேட் அரவிந்தர் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன், 26; இவர் டிப்ளமோ கேட்ரிங் படித்து விட்டு, புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். ஓட்டல் மூலம் அறிமுகமான புதுச்சேரி முத்தியாபேட்டை ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் மிலன் அருள்மணி, 46; இவர் பாலமுருகனுக்கு பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை சான்றிதழ் வாங்கி தருவதாக கூறி, அவரிடம் இருந்து முன்பணமாக 10 ஆயிரம் ரூபாயை வாங்கினார்.

தொடர்ந்து, பள்ளி ஒரிஜினல் சான்றிதழ், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்ளுடன், படிப்படியாக மொத்தம் 1.22 லட்சம் பணத்தை கடந்த பிப்ரவரி மாதம் மிலன் அருள்மணி வாங்கினார். அதனை அடுத்து, பாலமுருகன் வீட்டிற்கு தபாலில் பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழ் வந்தது. அந்த சான்றிதழை பாலமுருகன் எடுத்து கொண்டு சென்னையில் உள்ள வெளியுறவு துறை அமைச்சகத்தின் மூலம் பார்த்த போது, அது போலி சான்றிதழ் என தெரியவந்தது.

அதிர்ச்சிடைந்த, அவர் அரியாங்குப்பம் போலீசில் கடந்த 9ம் தேதி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, மிலன் அருள்மணியை தேடிவந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை நேற்று போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us