/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சந்தை புதுக்குப்பம் ஜீவா குரூப்ஸ் இல்ல திருமண விழா: முதல்வர் வாழ்த்து
/
சந்தை புதுக்குப்பம் ஜீவா குரூப்ஸ் இல்ல திருமண விழா: முதல்வர் வாழ்த்து
சந்தை புதுக்குப்பம் ஜீவா குரூப்ஸ் இல்ல திருமண விழா: முதல்வர் வாழ்த்து
சந்தை புதுக்குப்பம் ஜீவா குரூப்ஸ் இல்ல திருமண விழா: முதல்வர் வாழ்த்து
ADDED : செப் 10, 2024 06:48 AM

திருக்கனுார் : புதுச்சேரி மாநிலம், சந்தை புதுக்குப்பம் ஜீவா குரூப்ஸ் உரிமையாளர் ஜெயகீர்த்தி- ஜீவா அம்மாள் மற்றும் முத்தியால்பேட்டை கணபதி நகர் ஸ்ரீ ராமர் பஸ் சர்வீஸ் உரிமையாளர் ராமச்சந்திரன்-சுகந்தி தம்பதியினரின் இல்ல திருமண விழா புதுச்சேரி கே.பி.எஸ். கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்கள் சதீஷ்குமார்- ஜெயஸ்ரீ ஆகியோரை வாழ்த்தினார்.
விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் நேரு, ஆறுமுகம், பிரகாஷ் குமார், செந்தில்குமார், பாஸ்கர், லட்சுமி காந்தன், வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அருள்முருகன், சுகுமார், ஜெயபால், கோபிகா, நந்தா சரவணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் செந்தில்குமார்.
முன்னாள் சேர்மன்கள் சூரன், பாலமுருகன், பா.ம.க., மாநில தலைவர் கணபதி, திண்டிவனம் சவுக்கு வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக, திருமண விழாவிற்கு வருகை புரிந்தவர்களை மணமகனின் சித்தப்பா விஸ்வநாதன், சகோதரர்கள் புதுச்சேரி மணக்குள விநாயகர் கல்விக் குழும செயலாளர் நாராயணசாமி கேசவன், புகழ், சந்தை புதுக்குப்பம் ஜீவா குரூப்ஸ் அரிநாராயணன், யுவராஜ் ஆகியோர் வரவேற்றனர்.