sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அரசு பள்ளிக்கு அமைச்சர் பாராட்டு

/

10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அரசு பள்ளிக்கு அமைச்சர் பாராட்டு

10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அரசு பள்ளிக்கு அமைச்சர் பாராட்டு

10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அரசு பள்ளிக்கு அமைச்சர் பாராட்டு


ADDED : ஜூன் 14, 2024 05:59 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகம், சீருடைவழங்கப்பட்டது.

வில்லியனூர் அடுத்த பிள்ளையார்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மாணவி ஜீவிதா 500க்கு 477 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதல் இடம் பிடித்தார்.

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் ராபர்ட் கென்னடி தலைமை தாங்கினார். அமைச்சர் சாய்சரவணன் குமார், 100 சதவீத தேர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார். மாணவர்களுக்கு அரசின் இலவச பாடபுத்தகங்கள், சீருடைகள் வழங்கினார்.

விழாவில், அவர், பேசுகையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்களின் அயராத உழைப்பும், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலே இதற்கு முக்கிய காரணம். வரும் கல்வி ஆண்டிலும் இதே போல் அதிக மதிப்பெண்கள்களுடன் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும்' என்றார்.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை கோமதி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us