sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பஸ் நிலையத்திற்கு பிரதமர் பெயர் கேட்டு எம்.எல்.ஏ.,க்கள் ஊர்வலம்

/

பஸ் நிலையத்திற்கு பிரதமர் பெயர் கேட்டு எம்.எல்.ஏ.,க்கள் ஊர்வலம்

பஸ் நிலையத்திற்கு பிரதமர் பெயர் கேட்டு எம்.எல்.ஏ.,க்கள் ஊர்வலம்

பஸ் நிலையத்திற்கு பிரதமர் பெயர் கேட்டு எம்.எல்.ஏ.,க்கள் ஊர்வலம்


ADDED : பிப் 26, 2025 04:46 AM

Google News

ADDED : பிப் 26, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதிய பஸ் நிலையத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி பெயர் வைக்க கோரி பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் சட்டசபை நோக்கி ஊர்வலம் சென்றனர்.

புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில், நகராட்சி புதிய பஸ் நிலையம் கடந்த 1980ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்பின்பு 1992ம் ஆண்டு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து, ராஜிவ் காந்தி பெயர் சூட்டப்பட்டது.

தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ. 29 கோடி செலவில் பஸ் நிலைய வளாகம் இடித்து, வணிக வளாகத்துடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு புதுச்சேரி நகராட்சி ராஜிவ்காந்தி ஒருங்கிணைந்த பொலிவுறு பஸ் முணையம் என, பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கர் ஆகியோர் தலைமையில் ஆதரவாளர்கள் பஸ் நிலையத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி பெயர் சூட்ட வலியுறுத்தி நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து ஊர்வலம் சென்றனர்.

மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்று ஜென்மராகினி மாதா கோவில் அருகே ஊர்வலம் நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us